உள்ளூர் செய்திகள்

பைக் கவிழ்ந்து பெண் பலி

Published On 2023-03-26 15:12 IST   |   Update On 2023-03-26 15:12:00 IST
  • இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்த போது நிலை தடுமாறி இருவரும் பைக்குடன் கவிழ்ந்தனர்.
  • முருகம்மாள் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்காவரம் பகுதியை சேர்ந்த பெருமாள். இவரது மனைவி முருகம்மாள்( 45), இவருடைய மகன் ஜெகதீஷ்(22), இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் கங்கலேரி அருகே வரும் போது வேகமாக வந்த போது நிலை தடுமாறி இருவரும் பைக்குடன் கவிழ்ந்தனர்.

இதில் முருகம்மாள் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News