உள்ளூர் செய்திகள்

தனியார் எண்ணெய் நிறுவனத்தில் கொதிகலனில் தவறி விழுந்த பீகார் தொழிலாளி பலி

Published On 2023-08-28 06:52 GMT   |   Update On 2023-08-28 06:52 GMT
  • கம்பெனியில் உள்ள கொதிகலன் அருகே ராஜூ ராம் பணியில் இருந்தார்.
  • பணி முடிந்ததும் அவர் கீழே இறங்கி வந்தபோது திடீரென கால் தவறி அருகில் இருந்த கொதி கலனிற்குள் விழுந்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் தனியார் எண்ணெய் நிறுவனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூ ராம் (வயது20) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். அவர் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கம்பெனியில் உள்ள கொதிகலன் அருகே ராஜூ ராம் பணியில் இருந்தார். பணி முடிந்ததும் அவர் கீழே இறங்கி வந்தபோது திடீரென கால் தவறி அருகில் இருந்த கொதி கலனிற்குள் விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் ராஜூ ராமை மீட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜூ ராம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News