உள்ளூர் செய்திகள்

புதிய மேம்பால பணிக்கு பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.

பாவூர்சத்திரத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் பணிக்கு பூமி பூஜை

Published On 2022-06-24 09:12 GMT   |   Update On 2022-06-24 09:12 GMT
  • நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது.
  • பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

தென்காசி:

நெல்லை - தென்காசி சாலையினை தற்பொழுது நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் உள்ள கடைகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டன. பின்னர் வட பகுதியிலும் கடைகள் அகற்றப்பட்டன. அந்த பகுதிகளில் வாறுகால் கட்டும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

இந்த நான்கு வழி சாலையில் பாவூர் சத்திரத்தில் மட்டுமே ஒரு ரெயில்வே கேட் அமைந்து உள்ளது. இதனால் அந்த இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

புதிதாக அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் மொத்த நீளம் 900 மீட்டர் ஆகும். ரெயில்வே கேட்டில் கிழக்குப் பகுதியில் 450 மீட்டரும் மேற்குப்பகுதியில் 450 மீட்டர் அளவு கொண்டதாக அமைய உள்ளது.

இந்த பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று தமிழ்நாடு சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின்பு ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் புதிய பால பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

Similar News