உள்ளூர் செய்திகள்
பெங்களூரு வாலிபர் நீரில் மூழ்கி சாவு
- மதுகுமார் தனது நண்பர்களுடன் கிட்டுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
- ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரால் கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பலியானார்.
தருமபுரி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பட்டாத்தூர் நாகப்பா கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மதுகுமார் (வயது 23).
இவர் தனது நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்காக வந்தார். நேற்று மதுகுமார் தனது நண்பர்களுடன் கிட்டுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது மதுகுமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரால் கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் கரை ஒதுக்கியது.
இதுகுறித்து அவரது நண்பர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மதுகுமாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.