உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் -9-ந் தேதி நடக்கிறது

Published On 2022-09-04 13:53 IST   |   Update On 2022-09-04 13:53:00 IST
  • காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
  • முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

அதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News