உள்ளூர் செய்திகள்
தவறான தகவல் பரப்பப்பட்டதால் ஓசூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
- அக்கம்பக்கத்தினரிடம் தவறான தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.
- மன வேதனை யடைந்த லாவண்யா விஷம் குடித்தார்.
ஓசூர்,
ஓசூர் அருகே மத்திகிரி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (42), இவர் புத்தக கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி லாவண்யா (30).
இந்தநிலையில், லாவண்யாவுக்கும், வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது தோழி லகுமம்மா என்பவர், அக்கம்பக்கத்தினரிடம் தவறான தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை யடைந்த லாவண்யா விஷம் குடித்தார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்து வமனையிலும் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.