உள்ளூர் செய்திகள்

உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேத மருந்து: பதஞ்சலி நிறுவனம் தயாரிப்பு

Published On 2023-05-09 02:05 GMT   |   Update On 2023-05-09 02:05 GMT
  • ஆயுர்வேதம் என்றால் அது சரியானது.
  • ஆயுர்வேதம் பாதுகாப்பானது.

சென்னை :

ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குழு உடல் எடையைக் குறைப்பதற்காக 'திவ்யா வெயிட் கோ' என்ற பெயரில் ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சிக்குழு அறிவியலில் சிறந்து விளங்கி வருகிறது என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. இந்தக்குழு தயாரித்துள்ள புதிய ஆயுர்வேத மருந்தான 'திவ்யா வெயிட் கோ' எந்தவிதமான எதிர்மறையான பக்கவிளைவுகளும் இல்லாதது.

விரிவான உடல் செயல்முறைகள் இல்லாமல் கூட கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ், இன்சுலின் சுரப்பு பாதிப்பு இன்றி உடல் எடையைக்குறைக்க முடியும். இதன் விரிவான ஆய்வு முடிவுகள் 'பயோமெடிசின் மற்றும் பார்மகோதெரபி' என்கிற புகழ் பெற்ற சர்வதேச இதழில் கூட வெளியிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் என்றால் அது சரியானது. அதனால் எல்லாம் சாத்தியம் ஆகும். ஆயுர்வேதம் பாதுகாப்பானது. அமிர்தம் போன்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News