விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்தபடம்.
ஆத்தூரில் குழந்தைகள் பராமரிப்பு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம்
- தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
ஆத்தூர்:
தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பிரதிநிதி கிளாரன்ஸ், ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி, ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆத்தூர் சுகாதார ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.