உள்ளூர் செய்திகள்

ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

சுவாமிமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம்

Published On 2023-08-31 10:01 GMT   |   Update On 2023-08-31 10:01 GMT
  • கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து தொடங்கியது.
  • இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

சுவாமிமலை:

சுவாமிமலை ஸ்ரீ சுவாமி நாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து தொடங்கியது.

அரியலூர் ஏபிஎன் சில்க்ஸ் ரெடிமேட்ஸ், திருச்சி கிருஷ்ணா சாரீஸ் சுதாகர், ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது.

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கி ணைப்பாளர் கண்ண பிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Tags:    

Similar News