உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த பொன்சேகா.

குற்றாலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

Published On 2023-11-25 08:31 GMT   |   Update On 2023-11-25 08:31 GMT
  • ஆட்டோவில் இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா உள்பட 4 பேர் பயணித்தனர்.
  • கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

தென்காசி:

தென்காசி மேலகரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்து சுப நிகழ்ச்சிக்காக உணவு ஏற்றிக்கொண்டு தென்காசி -அம்பை சாலையில் மத்தளம்பாறையை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

ஆட்டோ கவிழ்ந்தது

ஆட்டோவில் அந்த உணவகத்தில் வேலை பார்த்த மேல இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா(வயது 36) என்ற பெண் உள்பட 4 பேர் பயணித்தனர்.

அங்கராயன்குளம் அருகே வந்தபோது எதிரே தென்காசியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

தலை நசுங்கி பலி

இந்த விபத்தில் பொன் சேகா இடிபாடுகளில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்சேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் (21) என்ற வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News