உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2023-08-19 06:20 GMT   |   Update On 2023-08-19 06:20 GMT
  • வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் காசிராஜ்(67). இவருக்கு குபேரன்நகரில் சொந்தவீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் சிவகாசி வடமலாபுரம் பகுதிைய சேர்ந்த நாச்சியார்கண்ணன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

மேல்தளத்தில் காசிராஜ் அவ்வப்போது தங்குவதற்காக சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

மேல்தளத்திலும் இதேபோல் பொருட்கள் சிதறிகிடந்தன. ஆனால் வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News