கணவரை சமாதானப்படுத்த சென்ற பெண் மீது தாக்குதல்
- கார்த்திகேயன் கவிதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
- அப்போது கார்த்திகேயன், அவரது தாயார் மாதம்மாள், சகோதரி ரம்யா ஆகியோர் தகராறு செய்து கவிதாவை தாக்கினர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தா பிள்ளைகாடு காளியம்மன் கோவில் 1-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் கவிதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகேயன் கவிதாவிற்கு கடந்த 26-ந் தேதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிஉள்ளார்.இதனைக்கண்ட கவிதா கணவரை சமாதானம் செய்ய அவரது வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் வந்துள்ளார்.அப்போது கார்த்திகேயன், அவரது தாயார் மாதம்மாள், சகோதரி ரம்யா ஆகியோர் தகராறு செய்து கவிதாவை தாக்கினர். இதனால் தலையில் காயம் அடைந்த கவிதா சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.