உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி அருகே விவசாயி மீது தாக்குதல்

Published On 2022-06-15 09:56 GMT   |   Update On 2022-06-15 09:56 GMT
வாழப்பாடி அருகே விவசாயி மீது தாக்குதலில் ஈடுப்பட்ட சோமம்பட்டி பால் கூட்டுறவு சங்க செயலர், மகன் மீது வழக்கு பதிந்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் சோமம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து மகன் சுரேஷ் (வயது 39). விவசாயியான இவர் இதே பகுதியிலுள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றி வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக இதற்கான ரசீதை சரியாக தராமல் சங்க செயலாளர் மணி, உதவி–யா–ளரான இவரது மகன் அன்பரசனும் அலை கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், விவசாயி சுரேஷ் நேற்று, செயலாளர் மணி அவரது மகன் நிறுவன உதவியாளர் அன்பரசன் உள்ளிட்டோருடன் முறையாக ரசீது வழங்குமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 3 பேரும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பால் கூட்டுறவு சங்கசெயலாளர் மணி, உதவியாளரான இவரது மகன் அன்பரசன் ஆகிய இருவர் மீதும் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ் மீதும் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News