உள்ளூர் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம் -கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை நடக்கிறது

Published On 2022-09-03 08:52 GMT   |   Update On 2022-09-03 08:52 GMT
  • ஆதார்எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.
  • 1-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள்

இணையதளத்தில் தாங்க ளாகவே ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கருடா கைபேசி செயலி மூலமாகவும் மற்றும் இதற்கான படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்வதன் மூலமாகவும் ஆதார்எண்ணை

தங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.

பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் சுலபமாக இணைக்க ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற

தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தவறாது ஆதார் நகர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று உரிய படிவம் (படிவம் -6பி) பூர்த்தி செய்து, மேற்கண்ட நகல்களை இணைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News