உள்ளூர் செய்திகள்

அசன பண்டிகை நடந்தபோது எடுத்த படம்

சாயர்புரம் அருகே அசன பண்டிகை விழா

Published On 2023-04-27 08:44 GMT   |   Update On 2023-04-27 08:44 GMT
  • அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
  • சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் பரி மாற்கு ஆலயத்தின் 163-வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. சேகர குரு இஸ்ரவேல் ராஜதுரைசிங் ஆராதனையை நடத்தினார். சபை குரு ஆமோஸ் மற்றும் குருவானவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

மாலை 5 மணிக்கு அசன பண்டிகை நடந்தது. நிகழ்ச்சியில் டி.எஸ்.எப்.சீ புட்ஸ் நிர்வாக இயக்குனர் சத்தியநாதன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் திருமண்டல பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அசன விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த பொறுப்பாளர்கள் அருள்ராஜ், சசிகுமார், ரூபன், அமிர்தராஜ் மற்றும் சபை நிர்வாக செயலாளர் ஸ்டீபன், சபை நிர்வாக பொருளாளர் கன்னையா கனகராஜ் மற்றும் சேகர செயலாளர் செல்வகுமார் ஆகியோரை திருமண்டல நிர்வாகஸ்தர்கள் பாராட்டினர். ஆலயமணி வரவேற்றார். சபை மன்ற நண்பர்கள் ஐக்கியம் சார்பில் நிர்வாகஸ்தர்களுக்கு பண்ணைவிளை உதங்கன் மற்றும் நடுவக்குறிச்சி சாலொமோன் பொன்ராஜ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் அசன விழாவில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News