உள்ளூர் செய்திகள்

201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

Published On 2023-10-29 12:13 IST   |   Update On 2023-10-29 12:13:00 IST
அரியலூரில்201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

அரியலூர், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சென்னை அவர்களிடமிருந்து வரப்பெற்ற கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும். இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News