உள்ளூர் செய்திகள்

கால்நடை கிளை நிலையம் திறப்பு

Published On 2023-09-05 13:50 IST   |   Update On 2023-09-05 13:50:00 IST
  • கால்நடை கிளை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட நிர்வாகம் சார்பில்

அரியலூர்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுரேஸ் கிருஷ்டோபர், உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ரமேஷ், டாக்டர் ஜெயந்தி, கால்நடை உதவி மருத்துவர் ராஜ்குமார், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி மகேந்திரன், துணை தலைவர் ராஜகுமாரி கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News