உள்ளூர் செய்திகள்
மக்கள் குறை தீர் கூட்டத்தில் 384 கோரிக்கை மனுக்கள்
- அரியலூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளது
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு, ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.