உள்ளூர் செய்திகள்

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

Published On 2023-06-16 15:25 IST   |   Update On 2023-06-16 15:25:00 IST
  • முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.
  • மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.

அப்போது அனைவரும், இந்திய குடிமகன், குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவ ணைப்போடு பராமரித்தி டுவேன்.

மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படு த்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்றவற்றில் முதியோர்களுக்கு முன்னு ரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள் மற்றும் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News