உள்ளூர் செய்திகள்

போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு

Published On 2023-06-28 14:56 IST   |   Update On 2023-06-28 14:56:00 IST
  • இப்பேரணிக்கு மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.
  • இதனை தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் நிலையம் சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணிக்கு மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

பேரணியில் போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்,போதையால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஊயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதையால் வாழ்க்கை சீரழிவு போன்ற கருத்துக்களை வலியுறுத்தியும், போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இப்பேரணியானது மொரப்பூர் பஸ் நிலையம், கல்லாவி பிரிவு சாலை, சந்தைமேடு, வட்டார வளர்ச்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் சென்றது.

இப்பேரணியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,போலீசார், ஆசிரிய,ஆசிரியைகள்,அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர்கள்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் மருதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News