உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

Published On 2023-06-13 09:44 GMT   |   Update On 2023-06-13 09:44 GMT
  • கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.
  • கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News