உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே ஆஞ்சநேயர் கோவிலில் மீண்டும் கொள்ளை முயற்சி

Published On 2023-01-22 06:50 GMT   |   Update On 2023-01-22 06:50 GMT
  • இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார்.
  • அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

கடலூர்:

கடலூர் அருகே குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கீழே கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அர்ச்சகர் பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் பார்த்த போது பொருட்கள் மற்றும் சாமி சிலைகள் இருக்கும் அறையின் பூட்டையும் உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் , ஏதேனும் சாமி சிலை மற்றும் பொருட்கள் திருடு சென்று உள்ளதா? என்பதை பார்வை யிட்டனர் அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

இந்த நிலையில் கோவிலில் 3-வது முறையாக மர்ம நபர்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலையில் அணிந்திருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த முறை மீண்டும் பூட்டை உடைத்து திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News