உள்ளூர் செய்திகள்
பேட்டையில் புகையிலை விற்ற மூதாட்டி கைது
- பாத்திமா மில்கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் கடையில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது.
நெல்லை:
நெல்லை பேட்டை மில்கேட் பகுதியை சேர்ந்தவர் செய்யது முகமது பட்டாணி. இவரது மனைவி செய்யதலி பாத்திமா(வயது 52). இவர் மில்கேட் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் கடையில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து பாத்திமா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.