உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே வேறு பணிக்கு இடமாற்றம் செய்ததால் ஊழியர் தற்கொலை

Published On 2023-09-02 09:15 GMT   |   Update On 2023-09-02 09:15 GMT
  • சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வெங்கடேசன் பணிபுரிந்து வந்தார்.
  • குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் பகுதியை சேர்ந்த வர் வெங்கடேசன்(வயது42). இவரது மனைவி பராசக்தி(32). சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வெங்கடேசன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்த பணி பிடிக்காத வெங்கடேசன், தான் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் பணி வழங்குமாறு அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் இதை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வெங்கடேசன் சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பராசக்தி கொடுத்தபுகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டுபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து வெங்க டேசனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News