உள்ளூர் செய்திகள்

முக்கூடல் அருகே மது பாட்டில்- புகையிலை விற்றவர் கைது

Published On 2023-08-07 09:09 GMT   |   Update On 2023-08-07 09:09 GMT
  • முக்கூடல் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
  • மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.

முக்கூடல்:

முக்கூடல் அருகே பாப்பாக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடக்கரை துலுக்கப்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த முக்கூடல் அருகே உள்ள மானாபர நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 35) என்பவரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவர் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சட்டவிரோத விற்பனைக்காக மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார்கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News