உள்ளூர் செய்திகள்

விமானப்படை மாணவர்கள் காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட காட்சி.

பரமத்திவேலூர் காவிரி ஆற்றை சுத்தம் செய்த விமானப்படை மாணவர்கள்

Published On 2022-06-09 07:55 GMT   |   Update On 2022-06-09 07:55 GMT
பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் விமானப்படை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றின் கரையில் உலகப்பெருங்கடல் தினத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் கந்தசாமிக்கண்டர், பரமத்தி பி.ஜி.பி. மற்றும் மெட்டாலா லயோலா ஆகிய கல்லூரியின் தேசிய மாணவர் விமான படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பரமத்திவேலூர் பேருந்து நிலையம் முதல் காவிரி ஆற்றங்கரை வரை ஊர்வலமாக கையில் பதாகை ஏந்தி உலகப்பெருங்கடல் தினத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கந்தசாமி கண்டர் கல்லூரியின் முதல்வர் தங்கராசு விழாவை தொடங்கி வைத்தார். பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, காவிரி ஆற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு கையுறைகளை வழங்கி பணிகளை பாராட்டினார்.

பின்னர் மாணவர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தப் படுத்தினர்.தேசிய விமானப்படை மாணவ, மாணவியர்களின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News