உள்ளூர் செய்திகள்

வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்த காட்சி.

வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

Published On 2023-03-09 09:33 GMT   |   Update On 2023-03-09 09:33 GMT
  • இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர்.
  • இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர்.

மகுடஞ்சாவடி:

மகுடஞ்சாவடி அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்தும் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் சார்பாக விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர். இக்கரைசலானது வேப்பிலை, புங்கம், ஆடாதோடா, எருக்கு, ஊமத்தை ஆகிய இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு நிழலுள்ள பகுதியில் வைத்து சேமிக்கப்படுகிறது.

இது இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர். நிகழ்ச்சியில் ஏராளமனா விவசயிகள் காலந்து கொண்டனர்.

Tags:    

Similar News