உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே மின்விசிறியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
- மாரியம்மாள் நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 5 ஆண்டுகளாக மாரியம்மாள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி பாரதியார் நகரை சேர்ந்தவர் நயினார். இவரது மகள் மாரியம்மாள்(வயது 27).
இவர் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுத்தமல்லி போலீ சார், மாரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த 5 ஆண்டுகளாக மாரி யம்மாள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக வும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.