உள்ளூர் செய்திகள்

கோவை அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை

Published On 2022-09-15 10:16 GMT   |   Update On 2022-09-15 10:16 GMT
  • மாணவி பள்ளிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார்.
  • மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மகேஸ்வரனை கைது செய்தனர்.

கோவை,

கோவை அருகே உள்ள எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவியை புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவரும், தற்போது கோவில் பாளையத்தில் தங்கி இருந்து அங்குள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்க்கும் மகேஸ்வரன் (வயது 21) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

அவர் மாணவி பள்ளிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் மாணவி யின் செல்போனை எப்படியோ தெரிந்து கொண்ட மகேஸ்வரன் அவரது செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்.

இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறி கதறி அழுதார். அவர் இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மகேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News