உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைக்க வேண்டும்

Published On 2022-06-28 09:48 GMT   |   Update On 2022-06-28 09:48 GMT
  • போலீஸ் கமிஷனர் உத்தரவு
  • விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ளன.

கோவை :

கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவ- மாணவிகள் சேர்க்கை பணிகள் தீவிரம் அடைந்து ள்ளன. விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்தநிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலை மையில் கல்லூரி முதல்வர்க ள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இது பற்றி போலீஸ் கமிஷனர் பாலகிரு ஷ்ணன் கூறியதாவது:-கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு ஏற்படுத்த வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க கல்லூரிகள், விடுதிகளில் மாணவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும். சாலை போக்கு வரத்து விதிகளை பின்பற்றி மாணவர்கள் வாகன ங்களை இயக்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் போலீசார் மூலம் மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறியதாவது:-தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று முதன்முறையாக பிடிபடும் கடைகளுக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாவது முறையாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3-வது முறை பிடிபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும்.மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார், தன்னார்வலர்கள் உதவியுடன் கூடுதலாக 1,142 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News