உள்ளூர் செய்திகள்

அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர் கைது

Published On 2023-01-28 15:28 IST   |   Update On 2023-01-28 15:28:00 IST
  • அனுமதி இல்லாமல் இங்கு விளம்பர போர்டு வைக்க கூடாது.
  • இதில் கோபம் கொண்ட அவர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடக்கு விதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திராவ் இவருடைய மகன் கார்த்திக்ராவ்(23).இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார் .

இவர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக காம்பவுண்ட் அருகே இந்து மக்கள் முன்னனி ஆட்டோ ஸ்டால் என புதிய ஒரு பிளக்ஸ் போர்டை மாநகராட்சி அனுமதி இல்லாமல் வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர் ரஞ்சித் குமார் அனுமதி இல்லாமல் இங்கு விளம்பர போர்டு வைக்க கூடாது என கார்த்திக்ராவிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கார்திக்ராவிடம் பிளக்ஸ் போர்டை கழட்டுமாறு கூறியுள்ளனர் .

இதில் கோபம் கொண்ட கார்த்திக்ராவ் திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டார் இது குறித்து ஊழியர் ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் கார்த்திக்ராவ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிைறயில் அடைத்தனர்.

Tags:    

Similar News