உள்ளூர் செய்திகள்

சேலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூகிலோ ரூ.1400-க்கு விற்பனை

Published On 2023-02-01 09:26 GMT   |   Update On 2023-02-01 09:26 GMT
  • பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
  • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது.

பூ மார்க்கெட்

இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1400

இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

இதனால் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக இன்று ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கலர் காக்காட்டான் ரூ.400, மலை காக்கட்டான் - ரூ.320, அரளி -ரூ.140, வெள்ளை அரளி ரூ.140, மஞ்சள் அரளி- ரூ140, செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.120, சி.நந்தியாவட்டம் ரூ.400, சம்பங்கி ரூ.30, சாதா சம்மங்கி ரூ.50 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News