உள்ளூர் செய்திகள்

சென்னையில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியை 8 லட்சம் பேர் பார்த்தனர்

Published On 2023-03-12 09:27 GMT   |   Update On 2023-03-12 09:27 GMT
  • தீவுத்திடலில் பொருட்காட்சி நடந்து வருகிறது.
  • 1,47,205 குழந்தைகள் என மொத்தம் 7,96,584 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

சென்னை:

சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு நடைபெறும் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் 64 வது நாளான நேற்று வரை 64 நாட்களிலும் சேர்த்து 6,49,379 பெரியவர்கள், 1,47,205 குழந்தைகள் என மொத்தம் 7,96,584 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

2019-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை 6,08,502 ஆகும். 2020-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை 6,83,603 ஆகும்.

2023-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை-7,96,584 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News