பென்னாகரத்தில் வரும் 7-ம் தேதி பருத்தி மறைமுக ஏலம்
- 7-ம் தேதி பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
- விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும்.
தருமபுரி,
இது குறித்து தருமபுரி வேளாண் துறை கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் 7-ம் தேதி பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பருத்தி சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளும் தாங்கள் விளைவித்த பருத்தி தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை வழங்க உள்ளனர். பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென வேளாண் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த பருத்தி ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கான தேவையான அவணங்கள் ஆதார்கார்டு ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம் , ஆகியவற்றை கொணஙடு வர வேண்டும். இது குறித்து தகவல் பெற 9944163463, 7904852293 ஆகிய எண்களில் காலை 10 முதல் பருத்தி விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். மேலும் 12 மணிக்கு மறைமுக ஏலம் பென்னாகரம், தாசம்பட்டி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட நடைபெறுகிறது.