சிலிண்டர் வெடித்ததில் சேதமான வீடு.
சேந்தமங்கலம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்
- பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.
- சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி அமராவதி(40). இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிரு ந்தார்.
அப்போது சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆதிமூர்த்தி, அமராவதி, மகள் சுமதி(15), மகன் பிரவீன்குமார்(12)ஆகிய 4 பேரின் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின் அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.