உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த 30 பேர் கைது

Published On 2023-05-14 08:19 GMT   |   Update On 2023-05-14 08:19 GMT
  • போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் பதுக்கல் மற்றும் சாராயம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த 30 பேர்மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News