உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகேசெப்டிக் டேங்க்கில் ஆயில் அடித்த 3 தொழிலாளிகள் மயக்கம்:

Published On 2023-02-14 09:47 GMT   |   Update On 2023-02-14 09:47 GMT
ரவி (45) என்பவர் செப்டிக் டேங்கில் இறங்கி கருப்பு ஆயில் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது ரவி எதிர்பாராத விதமாக மயக்கமடைந்தா

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன் மகன் ராஜ்முகமது (வயது 35) இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.இந்நிலையில் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கின் உட்புறத்தில் கருப்பு ஆயில் அடிக்க வேண்டுமென தொழிலாளிகளிடம் கூறினார்.அதன்படி கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45) என்பவர் செப்டிக் டேங்கில் இறங்கி கருப்பு ஆயில் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது ரவி எதிர்பாராத விதமாக மயக்கமடைந்தார்இதனை அறிந்த தொழிலாளிகளான சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்( 37), பிரகாஷ் (29) ஆகியோர் செப்டிக் டேங்கில் இறங்கினர். இவர்களும் மயக்கம் அடைந்தனர்.

அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரவி, தர்மலிங்கம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர். இந்த சம்பவம் சூளாங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News