உள்ளூர் செய்திகள்
விளாங்குடி பகுதியில் 3 நாட்கள் மின் நிறுத்தம்
- மின் பாதையில் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருவையாறு துணை மின் நிலையத்திலிருந்து விளாங்குடி 11 கி.வோ மின்னோட்டம் செல்லும் மின் பாதையில் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.
எனவே சாலையின் அருகில் உள்ள விளாங்குடி 11 கி.வோ மின் பாதையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால் நாளை ( 11-ந் தேதி) மற்றும் 15, 17-ந் தேதி என 3 நாட்களும் பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, திங்களூர், பெரமூர், ஓலத்தேவராயன் பேட்டை, சீனிவாச நகர் ஒக்கக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.