உள்ளூர் செய்திகள்

வீட்டில் பதுக்கிய 270 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்முதியவர் கைது

Published On 2023-02-06 09:44 GMT   |   Update On 2023-02-06 09:44 GMT
  • ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசருக்கு தகவல் கிடைத்தது.
  • இதை அடுத்து கதிராநல்லூர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கதிராநல்லூர் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து கதிராநல்லூர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகே மாரிமுத்து என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.

இதில் 270 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், மாரிமுத்துவையும் கைது செய்தனர். 

Tags:    

Similar News