உள்ளூர் செய்திகள்
239 இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு
- தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
- இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது.
சேலம்:
தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது. நாமக்கல் எஸ்.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராஜா நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாநகர சி.பி.சி.ஐ.டி. ஓ.சி.யு. பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம் சென்னை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி.யாக பதவி உயர்வுபெற்றுள்ளார். ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், என்.ஐ.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோரும் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வுபெற்றுள்ளனர்.