உள்ளூர் செய்திகள்

21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2022-09-05 07:16 GMT   |   Update On 2022-09-05 07:16 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
  • 21,807 தடுப்பூசி பேர் செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு, செப்.5-

ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டன.

இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்ப–ட்டது.

நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 858 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 8ஆயிரத்து 948 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 12 ஆயிரத்து 1 பேரும் என மொத்தம் 21,807 தடுப்பூசி பேர் செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News