உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் இர்பான். லாரி டிரைவர். இவர் லாரியில் வளர்ப்பு மீன் குஞ்சுகளைஏற்றிக் கொண்டு பொன்னேரி அடுத்த குண்ண மஞ்சேரி அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம வாலிபர்கள் கத்திமுனையில் டிரைவர் இர்பானை மிரட்டி ரூ. 6 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவை கைது செய்தனர். அவரது கூட்டாளியான நெய்தவாயல் பகுதியை சேர்ந்த ஒருவரை தேடிவருகின்றனர்.