உள்ளூர் செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
புதுச்சேரி:
வில்லியனூரில் தர்மபால சோழ மன்ன ரால் கட்டப்பட்ட திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு தேர் திருவிழா தொடங்குகிறது.
இதையொட்டி கடந்த 5 நாட்களாக பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆடு பலிகொடுக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி தேரோட்டம், 12-ந் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.