உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தோட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வி.முத்துலிங்கா புரத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வருவாய் ஆய்வாளர் ரமேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தில் அவர் சோதனை நடத்தினார்.
அப்போது தங்கப்பாண்டி யன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதாக கூறி அங்கு அய்யனார் (30) என்பவர் பட்டாசுகள் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தோட்டத்தில் இருந்த 1000, 2000 வாலா சரவெடிகள், 27 கிலோ உதிரி வெடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அய்யனாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.