உள்ளூர் செய்திகள்
.

கோவில் நிலம் குத்தகை தொடர்பான விவகாரம்: விவசாயி குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-06-02 09:44 GMT   |   Update On 2022-06-02 09:44 GMT
கோவில்நிலத்தை குத்தகை எடுத்தது தொடர்பாக வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.
தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள சிறுகளூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்.இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு கொடுக்க வந்தார்.
 அப்போது அவர்களிடம் மண் எண்ணெய் இருந்ததை கண்டறிந்த போலீசார் பறிக்க முயல்வதற்குள் சண்முகத்தின் மகன் தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். 

அப்போது கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் சண்முகத்தின் அதே ஊரை சேர்ந்த சிலர் விவசாயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர் என்றும் இதனால் ஊருக்குள் செல்லவும்,பொருட்கள் வாங்கவும் முடியவில்லை.

போலீசில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மறுப்பதால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து இது தொடர்பான புகார் மனுவை எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்து விட்டு திரும்பினர்.
Tags:    

Similar News