உள்ளூர் செய்திகள்
மரக்கன்று நட்ட கல்லூரி மாணவர்கள்
சீர்காழி புத்தூர் அரசு கலை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
சீர்காழி:
தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியை பின்பற்றும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டு படித்து இந்த ஆண்டு படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து விடைபெறும்
மாணவர்கள் அவர்களின் நினைவாக 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு தங்களின் நன்றியை கல்லூரிக்கு செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர். கி.விஜயலட்சுமி வணிகவியல் துறைத்த லைவர் முனைவர். மு. திருநா ராயணசாமி மற்றும் துறை பேராசிரியர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வே.சுரேஷ் முனைவர் ம.ராஜசேகர் முனைவர் வ.தம்பிஞானதயாளன் ஆகியோர் கலந்து கொ ண்டனர்.
கல்லூரியிலிருந்து விடை பெறும் மாணவர்கள் இதுபோன்று மரக்கன்றுகளை நட்டு தங்களின் நினைவுகளை நிலைநாட்டும் நற்பண்பு களை கல்லூரி நிர்வாக மும் அனைத்துத் துறை பேராசிரியர்களும் மகிழ்வுடன் பாராட்டினர்.