உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-06-02 12:00 IST   |   Update On 2022-06-02 12:00:00 IST
சேதராப்பட்டு தொழிலாளர்களுக்கு கஞ்சாவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் வேலைபார்த்து வருகின்றனர். 

மேலும் இங்கு தனியார் கலைக்கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளார்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக சேதரா ப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது சட்டைப்பையில் சோதனை மேற்கொண்டனர். அவரது சட்டைப்பையில் சிறு சிறு பொட்டலங்களாக 11 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பதை போலீசார் கண்டனர். மொத்தம் 115கிராம் கஞ்சா வைத்திருந்தார். 

அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுவை ஆலங்குப்பம் ஜி.வி. நகரை சேர்ந்த பிரேம் குமார் என்ற பிரேன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரேம் குமாரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News