உள்ளூர் செய்திகள்
கோட்டாட்டசியர் உள்பட அரசு அதிகாரிகள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் கோட்டாட்டசியர் உள்பட அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்ன. அதன் படி சாத்தூர் கோட்டாட்சியராக இருந்த புஷ்பா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி சாத்தூர் கோட்டாட்சியராக இருந்த புஷ்பா இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் நரிக்குடிக்கு, திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி சாத்தூருக்கும், மருத்துவ விடுப்பிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் சத்ய சங்கர் வத்ராயிருப்பிற்க்கும், இங்கு பணிபுரிந்த சத்யாவதி விருதுநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் சிறுசேமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ் நரிக்குடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.