உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வள்ளியூர் அருகே மிட்டாய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-05-30 10:08 GMT   |   Update On 2022-05-30 10:08 GMT
வள்ளியூர் அருகே மிட்டாய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள வடக்கு வள்ளியூர் காமராஜர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 43). மிட்டாய் வியாபாரி. 

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலசுப்பிரமணியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலசுப்பிரமணியனின் மனைவி ராதாபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

 கடந்த சில நாட்களாக அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று பாலசுப்பிரமணியன் கூறி வந்துள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  

இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.  

இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News