உள்ளூர் செய்திகள்
கண் பரிசோதனை முகாம் நடைபெற்ற காட்சி.

ஆத்தூரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் கண் பரிசோதனை முகாம்

Published On 2022-05-30 08:58 GMT   |   Update On 2022-05-30 08:58 GMT
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஆத்தூரில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஆத்தூர்:

ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆத்தூர் கிளை  மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதிஉதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்  நடந்தது. 

இதில் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 60 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. கண்புரை நோயாளிகள் 23 பேரை லென்ஸ் பொருத்தி நவீன முறை சிகிச்சை செய்வதற்காக இலவசமாக தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

முகாமில் ஆத்தூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளை மேலாளர் சரவண குமார், தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் கமால்தீன், வியாபாரிகள் சங்கத் தலைவர் தமிழரசன் , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News